ஸ்பெக்ட்ரம் பாக்கியால் திணறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிம்மதி

நிலுவைத் தொகையை பல தவணைகளாக செலுத்தும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வட்டி இப்போதைய நிலுவைத் தொகை அடிப்படையிலேயே வசூலிக்கப்படும்.


ஹைலைட்ஸ்



  • 42 ஆயிரம் கோடி ரூபாய் வரையான நிலுவையைச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம்.

  • நஷ்டம் அடைந்த வோடபோன்-ஐடியா நிறுவனம், ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிம்மதி.


இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்த மத்திய அரசு 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் கொடுத்துள்ளது.


தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏஜிஆர் (AGR) எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் (Adjusted Gross Revenue) அடிப்படையில் அலைக்கற்றை உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் நிர்ணயிக்கிறது.

மத்திய அரசின் நிதி விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா?

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஏஜிஆர் கணக்கீடு பற்றிய வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவால் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசை அணுகி, உத்தரவைத் தளர்த்துமாறு கேட்டுக்கொண்டன. இதன்பேரில், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரையான நிலுவையைச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.